நாம்பொதுவாக இரக்கம் காட்டுவது நம்மோடு காலவெள்ளத்தில் பயணிக்கும் சக மனிதர்களை மட்டும்தான் அதை தாண்டி மற்ற எந்த உயிர்களுக்கும் நம்மிடம் இரக்க உணர்வுதோன்றாது, இப்படி நான் நினைத்தது தவறு என்பதினை எங்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புறபகுதியில் நான் அறிந்தேன், நடந்த நிகழ்வு இதுதான், அதாவது எங்கள் நகரத்தில் இருந்து ஒருமுறை விடுமுறை நாட்களில் நானும் என் உறவுகளும் கிராமத்தில் உள்ள எனது அண்ணன் (கால்நடை மருத்துவர்) திரு.நரசிம்மன் அவர்களோடு நாட்களை இனிமையான இயற்கை சூழலில் இருக்க நினைத்துசென்றிருந்தோம், அந்த நாட்களில் அவர் தினம்தோறும் காலை மாலை இருவேளைகளிலும் மருத்துவமனனைக்கு வரும் புறநோயளிகளான கால்நடைகளை கவனித்து அவைகளுக்கு மருந்து அளிபபார், ஒரு நாள் மாலை நேரம் 4.30 மணி இருக்கும் ஒரு அழுகை சத்தம் மருத்துவமனை அருகில் இருந்து, அந்த மருத்துவமனை அருகில்தான் எங்கள் அண்ணன் வசிக்கும் இருப்பிடம், நான் மற்றும் என்னுடைய இரு அண்ணன்களுடன் ஓடி சென்று கவனித்தால் ஒரு சிற்றாடு ஒன்றை விவசாயி ஒருவர் பாம்பு கடித்தாக கூறி உடன் மருத்துவ உதவிசெய்யகோரினார், அச்சமயம் நானும் எனது சிறிய அணணனும்சேர்ந்து ஒரு குரலில் இந்த ஆடு மரித்துவிடும் என்று கூறிவிட்டோம், எனதுபெரிய அண்ணன் மிகக்கடுமையாக எங்களை கடிந்துகொண்டு அந்த சிற்றாடினை பற்றி இவ்வாறு கூறுவது என்பது விவசாயின் குழந்தையைசொல்வதுபோல் என்று அறிவுறுத்தினார், அன்று முதல் என் மனதில் மண்ணில் உள்ள எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் எண்ணம்தோன்றியது, நாங்கள் மன்னிப்பும்கேட்டோம். எங்களை அந்த ஆடு அன்போடு பார்த்தது. ஜந்தறிவு உள்ள பிராணிகளுக்கு இருக்கும் நன்றியுணர்வு கூட மனிதர்களுக்கு கிடையாது. பயணங்களும் பசுமையான நிகழவுகளும் தோன்றும்......
Tuesday, December 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சங்கமித்ரா,
நானும் என் சிறிய வயதில் பிராணிகளுடன் நேசமாக இருந்துள்ளேன். அவற்றிற்கு ஏதாவது நிகழ்ந்து விட்டால் என் உணர்ச்சிகள் நெகிழ்ந்துவிடும்.
தொடருங்கள்.
Post a Comment