Monday, December 8, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 4 )


எனது பயணத்தில் நான் இலக்கியவட்டத்திற்காக நூலகபாதையை​நோக்கி ​சென்றதே ஒரு சுகமும் சோகமும் நிறைந்த ஒரு அனுபவம், ​பொதுவாக நாம் ஒரு தொடரினை எழுதும்போது சிலசமயம் நம் பயணபாதையில் முந்தைய அனுபவத்தின் நிகழ்வுகளை புதிய அனுபவங்க​ளோடு​தொடர்புபடுத்தி ஒப்பிட்டு எழுத​வேண்டிய நிலையும் ஏற்படும், இந்தநான்காம் பாதையும் அப்படிதான். நான் பள்ளிபருவத்தினை தாண்டும் முன்பு, எனக்கு பள்ளி நண்பர்களை விட நான் வசிக்கும் இட நண்பர்கள் நிறையஉண்டு, அந்தவகையில் என் நண்பன் சீனிவாசமூர்த்தி, மற்றும் சிலர், நாங்கள் எல்​லோரும் பள்ளி விடுமுறைகாலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றிதிரிந்த காலங்கள் உண்டு, அப்படிபட்ட காலங்களில், என்னுடைய நண்பனின் அக்கா பத்மா அதிகமாக வாரந்திர கதைநூல்கள் வாங்கி படிப்பார்கள், எங்களை ஒருநாள் கூப்பிட்டு பழைய புத்தககடையில்​சென்று கதைநூல்கள் வாங்கிவர பணித்தார், என் நண்பன் அதற்காக அக்காவிடம்​வைத்த ​கோரிக்கை நாங்கள் வாங்கிதந்தால் எங்களுக்கு சினிமாவுக்கு ​போக காசு தர​வேண்டும் என்பதே, அவரும் தருகிறேன் என்றார், நானும் என் நண்பனுடன் சேர்ந்து புத்தகம் வாங்க பழையநூல்கள் விற்கும் கடைக்கு​சென்றோம், அப்போது என் மனதில் தோன்றியது தான் சிறிய வாடகை நூலகம் அமைக்கும் எண்ணம், நண்பனிடம் என் கருத்தினை முன்​வைத்தேன், பணம் சம்பாதிக்க​வேண்டும என்ற எண்ணமெல்லாம் கிடையாது, நாம் செலவிடும் நேரத்தினை பயனுள்ளதாக​வேண்டும் என்ற ஆவல், அவனும் ஒப்புக்கொள்ள என் இல்லத்தில் எங்களுடைய கனவு நிறைவேறியது, எங்கள் பகுதியில் வசிக்கும் தாய்மார்களுக்கு வீடு​சென்று புத்தகங்களை​கொடுப்போம், இவ்வாறக எங்கள்​பொழுதும் இனிமயாகவும் , எங்கள்​செலவுக்கும் பணம் கிடைத்தது, எங்களுடைய மகிழ்ச்சியில் நடந்தது ஒரு வருத்தமான நிகழ்வு, அதுதான் என் நண்பனின் அம்மாவின் உடனடி மறைவு, ஒரு காலை​நேரத்தில் உடல் நலகுறைபாடு காரணமாக மருத்துவரிடம் ​சென்ற அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து​போனார், அந்த நிகழ்வு எங்களை மிகவும் பாதித்துவிட்டது, அந்நாள் முதல் நாங்கள் நடத்திவந்த நூலகமும் எங்கள்​சோகத்தோடு​சேர்ந்து முடங்கிவிட்டது, ஆனால் என்னை இந்த நிகழ்வு நூலகபாதையை ​நோக்கி திரும்பபார்க்க ​செய்தது, இவ்வாறக என்னுடைய இலக்கியவட்டம் ஆரம்பித்தது ஒரு ​​சோகநிகழ்வோடு, பயணங்களும் இனிய பாதைகளும் தொடரும்..........................

1 comment:

Unknown said...

சங்கமித்திரரே,

சோகமும், இனிமையும் கொண்ட வாழ்க்கைப் பயணத்தினை ,அழகாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.