Tuesday, December 16, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 8 )


நாம் பயணிக்கும் பாதைகளில் பல சமயங்களில் சில நிகழ்வுகள் என்றும் நம் மனதை விட்டு அகலாதவைகாளக இருக்கும். சில சமயம் மனது கனக்கவும் செய்யும். நான் கூறும் இச்சம்பவம் என் கண்களை விட்டு இன்னும் அகலாமல் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கபடும் ஏற்காடு மலைவாசத்தலம் எங்கள் ஊர் அருகில் உள்ளது. எனது கல்லூரி நாட்களில் நான் நாட்டுநலபணி திட்டதிற்காக ​மேலே சொன்ன மலைபகுதிக்கு பத்துநாட்கள் சென்று இருந்தேன் . அங்கு மிகவும் புகழ் மிக்க ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தபட்ட ஒரு பள்ளிகூடம் தான் MONFORT CONVENT OF RESIDENTIAL SCHOOL இந்த பள்ளியில் அந்நாளிலேயே மாணவர்கள் ஆஸ்டலில் தங்கிதான் படிப்பார்கள், அதற்கு ஆகும் கட்டணமும் மிகவும் அதிகம், வசதிவாய்ப்பு உள்ளவர்கள்தான் இங்கு படிக்கமுடியும் நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பும் இப்பள்ளிக்கு அருகில்தான் இருந்தது, தினமும் நாங்கள் அந்த பள்ளியின் அருகில் நடைபயிற்சி ​மேற்கொள்ளுவோம். அவ்வாறன காலத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை என்று நினைக்கிறேன், பள்ளியின் வாரவிடுமுறை நாட்களில் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் ஆசையுடன்​குழந்தைகள் விரும்பிய உணவு மற்றும் உடைகளுடன் அவர்களை காண வந்திருந்தார்கள் அங்க நான் கண்ட காட்சி, சிறிது கூட அந்த குழந்தைகளுக்கு தங்கள் அம்மா அப்பாகளின் மீது பாசமில்லாமல் ஆங்கிலத்தில் hai என்று ​சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த​பொருட்களை வாங்கி​கொண்டு ஒரு ஜந்து நிமிடம் கூட நிற்காமல் சென்றுவிட்டார்கள், குழந்தைகளின்
பெற்றோர்களும் வருத்ததுடன் கண்கள் பனிக்க கனத்தஇதயத்துடன் ​வெளியில் காட்டி​கொள்ளாமல்​சென்றனர். இதுதான் இந்த பள்ளியின் உண்மை நிறம், அதுவும் பாசத்திற்கு ​இலக்கணமான நம் தமிழ்நாட்டில், மாணவர்களும் தமிழர்கள்தான். இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது அதன் விளைவுதான் என் குழந்தையை இம்மாதிரியான பள்ளிகூடங்களில் நான் ஆரம்பத்திலேயே சேர்க்கவில்லை. இன்று உள்ள நிலைமையோ ​வேறு காண்வெண்டில் படிக்காமலேயே வளரும் குழந்தைகள் அப்படிதான் உள்ளார்கள், வாழ்க பணநாயகம்.

Friday, December 12, 2008

அனுபவங்களின்​கதை ( பயணம் 7)


நாம் பயணித்த பாதைகளில் சில முக்கியஇடங்கள் நம் வாழ்க்கை பரிணாமத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பங்களிப்பினை தரும்.
அந்த பங்களிப்புகள் நமக்கு பல்வேறுவகையில் பயனுள்ளதாகவும் இருக்கும், அவ்வகையில் நான் தவழ்ந்து, விளாயாடி, நடந்து, கண்ணயர்ந்து வந்த எங்கள் நகரத்தின்​மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில்வண்டி நிலையத்தின் அனுபவங்கள்தான் இவை, இதோ நான் குழந்தை கண்கொண்டு
பார்த்தபோது, அன்றாடம் எனது தந்தை பள்ளி முடிந்துவந்தவுடன், ரயில்நிலையத்தில் ஒரு மேம்பாலம் உண்டு அங்கு என்னை​கூடடி​சென்று இயந்திரபாம்பின் வருகையை காண காத்திருப்பார். என்னை​போலவே என் இல்லத்தின் அருகில் அந்நாளில் என்வயது தோழியான ரமாவும் அவளின் அப்பாமடியில் உட்கர்ந்திருப்பார், இயந்திரபாம்பும் வந்து நிற்க்கும் அந்நேரத்தில் அந்த நிலையத்தில் பல்வேறு மரங்கள் உண்டு, மரத்தில் உள்ள பல்வேறு வகையான பறவைகளும் சத்தமிட்டு​கொண்டு தன் குஞ்களோடு கொஞ்சிமகிழும், நான் அதே புகைவணடி நிலையத்தில் என் சகநண்பர்களோடு சேர்ந்து மரங்களை சுற்றியும், ஓய்வுக்காக நின்று​கொண்டிருக்கும்
புகைவண்டியில் ஒளிந்து​கொண்டும், நிலக்கரிகளை அள்ளி ஒருவர்மீது ஒருவர் போட்டு​கொண்டும் விளாயாடி இருக்கிறோம். எனது கல்லூரி நாட்களில் ரயிலடியில் அமைதியாக நாங்கள் பாடங்களும் படித்தும் இருக்கிறோம், அந்நாட்களில் நாங்கள் உடற்பயிற்சிக்காக நான் பள்ளிக்கு சென்றுவிட்டு சற்று காலற ஓய்வெடுக்கும் சமயத்தில்
மாலை 6 மணிக்கு தினமும் விருத்தாசலம்​செல்லும் புகைவண்டி வரும் அதன் ஒட்டுனர் எங்களது நீண்டகாலநண்பர், அவர் எங்களை புகை வண்டியின் அருகில் அழைத்து​சென்று அதன் நீராவி வரும்பகுதியில்
கால்களை காண்பித்து எங்களுக்கு அந்நாளிலேயே நீராவிமஜாஜ் ​செய்துள்ளார், காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்தரயிலடி இருந்த்து,
பலர் தாங்கள் காதலிக்கு அளிக்கும் கடிதங்களை பகிரங்கமாக​​மேம்பாலசுவரில் எழுதி வைப்பார்கள், இவ்வாறாக இருந்த ரயிலடி சமீபத்தில நான்​நேரில் பார்த்த​போது முழுஇயந்திரதனமாகமாறி தன்னோடு நிரந்தரமாக இருந்த உறவுகளான மரங்களையும், பறவைகளையும், பூச்செடிகளையும் இழந்து கண்கள்​கைகள் அற்ற ஒரு முடவனாக இருக்கின்ற காட்சியினை கண்டு என்கண்களும் பனித்தது, கலங்கி ஒரு பயனும் இல்லை, இன்று அந்த இடத்தில் முளைத்துள்ளன கணிப்பொறி பதிவுநிலையம், இப்பொழுதும் தன்னை காலத்தோடு மாற்றி​கொண்டு ஆங்கிலம்​பேசும் கான்வெண்ட்குழந்தைகள் மற்றும் ​செல்போன்​காதலர்களின் வருகைகாகவும் காத்து​கொண்டிருக்கிறது அந்த RAILWAY STATION. ரயில்வண்டிநிலையமே, நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய். இனிய பயணங்களின் வருகைகாக காத்திருங்கள்......

Tuesday, December 9, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 6)


நாம்​பொதுவாக இரக்கம் காட்டுவது நம்மோடு கால​வெள்ளத்தில் பயணிக்கும் சக மனிதர்களை மட்டும்தான் அதை தாண்டி மற்ற எந்த உயிர்களுக்கும் நம்மிடம் இரக்க உணர்வு​தோன்றாது, இப்படி நான் நினைத்தது தவறு என்பதினை எங்கள் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புறபகுதியில் நான் அறிந்தேன், நடந்த நிகழ்வு இதுதான், அதாவது எங்கள் நகரத்தில் இருந்து ஒருமுறை விடுமுறை நாட்களில் நானும் என் உறவுகளும் கிராமத்தில் உள்ள எனது அண்ணன் (கால்நடை மருத்துவர்) திரு.நரசிம்மன் அவர்களோடு நாட்களை இனிமையான இயற்கை சூழலில் இருக்க நினைத்து​சென்றிருந்தோம், அந்த நாட்களில் அவர் தினம்தோறும் காலை மாலை இருவேளைகளிலும் மருத்துவமனனைக்கு வரும் புறநோயளிகளான கால்நடைகளை கவனித்து அவைகளுக்கு மருந்து அளிபபார், ஒரு நாள் மாலை நேரம் 4.30 மணி இருக்கும் ஒரு அழுகை சத்தம் மருத்துவமனை அருகில் இருந்து, அந்த மருத்துவமனை அருகில்தான் எங்கள் அண்ணன் வசிக்கும் இருப்பிடம், நான் மற்றும் என்னுடைய இரு அண்ணன்களுடன் ஓடி சென்று கவனித்தால் ஒரு சிற்றாடு ஒன்றை விவசாயி ஒருவர் பாம்பு கடித்தாக கூறி உடன் மருத்துவ உதவி​செய்ய​கோரினார், அச்சமயம் நானும் எனது சிறிய அணணனும்​சேர்ந்து ஒரு குரலில் இந்த ஆடு மரித்துவிடும் என்று கூறிவிட்டோம், எனது​பெரிய அண்ணன் மிகக்கடுமையாக எங்களை கடிந்து​கொண்டு அந்த சிற்றாடினை பற்றி இவ்வாறு கூறுவது என்பது விவசாயின் குழந்தையை​சொல்வது​போல் என்று அறிவுறுத்தினார், அன்று முதல் என் மனதில் மண்ணில் உள்ள எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் எண்ணம்​தோன்றியது, நாங்கள் மன்னிப்பும்​கேட்டோம். எங்களை அந்த ஆடு அன்​போடு பார்த்தது. ஜந்தறிவு உள்ள பிராணிகளுக்கு இருக்கும் நன்றியுணர்வு கூட மனிதர்களுக்கு கிடையாது. பயணங்களும் பசுமையான நிகழவுகளும் ​தோன்றும்......

அனுபவங்களின் கதை ( பயணம் 5)


நான் எப்போதும் கடந்தவந்த பாதைகளில்​ஏற்பட்ட பலவித அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைத்து சிலாகித்து​போவேன், அந்த நிகழ்வுகளின் தன்மை எப்படி இருப்பினும் என் மனதில் உள்வாங்கி அதன் காரணங்களை எண்ணுவேன். அப்படியான ஒரு அனுபவம்தான் இது. அதாவது 1976 ஆண்டு என்று நினைக்கிறேன், எங்கள் ஊரில் மட்டுமல்ல தமிழ்நாடே ஒரு மிக​பெரிய புயலுடன்கூடிய மழையினை சந்திக்க​நேரிட்டது,
எனது பெற்றோரினை பற்றி கூற​வேண்டும் இந்த இடத்தில், அதாவது இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள். எனது தந்தையார் எங்கள் மாவட்டத்தினை சார்ந்த ஒரு கிராமபுற பள்ளியில பணிபுரிந்தநேரம், நான் என் தாயாரின் பள்ளியில் படித்தவன். அச்சமயத்தில் மேலே குறிப்பிட்டது​போல் நாங்கள் இயற்கையின் கோரதாண்டவத்தை சந்திக்க நேரிட்டது, எங்கள் பகுதியில் ஒரு சிறிய ஆறு ஒன்று உண்டு,
இந்த மழையின் காரணமாக நாங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்டது, என் அப்பா கிராமபுற பள்ளியிலேயே அந்நாளில் தங்கிவிட்டார், நானும் என் அம்மாவும்தான் எங்கள் வீட்டில் இருக்க​நேரிட்டது, ​மாலை நேரம் ஆக ஆக என் வீட்டிலும் நாங்கள்​மேட்டுபகுதியில் இருந்தாலும் தண்ணீர் புகுந்துவிட்டது, நாங்கள் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணி வெளியில் வந்தபோது எதிர்பாரவிதமாக தண்ணீரில் விழுந்துவிட்டேன் எங்கள் பகுதியை​சேரந்த ஒரு​
பெரியவர் என்னை நீரின் ஆழத்தில இருந்து மீட்டார் இல்லையெனில் இந்த அனுபவங்கள் எழுத நான் இருந்திருக்கமாட்டேன். அந்நாளில் எனக்கு கிடைத்த அனுபவம்தான் பிற்காலத்தில் என்னை பாரதியையும், தந்தை பெரியாரையும் திரும்பி பார்த்து அவர்கள் பாதையில் நான் இன்றும் நடந்து செயலாற்றி​கொண்டிருக்கிறேன், நடந்தது இதுதான் அந்த புயல் நாளில் எங்கள் பகுதியில் ஒரு வீடு அவர்கள் பூ வியாபாரம்​செய்பவர்கள் அவர்கள் இல்லம் சற்று உயரமாகவும் ஓரளவிற்கு இடவசதி கொண்டாதாகவும் இருக்கும், அந்த இல்லத்தில் எங்கள் பகுதியை​சேர்ந்த அனைவருக்கும் அந்த இரவு நேரத்தில் உணவு சமைத்து சமபந்தி விருந்து படைத்தார்கள். அந்த இரவு அனுபவம் பிற்காலத்தில் என் வாழ்க்கையில் பாரதிஎழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா பாடலும், தந்தை பெரியார் காட்டிய சமத்துவபாதையும் நினைத்து இன்றும் பயணித்து​கொண்டு இருக்கிறேன். நீ மட்டும்
நினைத்தால் போதுமா என்று என்னை பாரத்து சிரிக்கின்ற தந்தை மற்றும் தனையனிடமும உள்ள கைதடிகள். பாதைகளும் இனிய அனுபவங்களும் உதிக்கும்......

Monday, December 8, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 4 )


எனது பயணத்தில் நான் இலக்கியவட்டத்திற்காக நூலகபாதையை​நோக்கி ​சென்றதே ஒரு சுகமும் சோகமும் நிறைந்த ஒரு அனுபவம், ​பொதுவாக நாம் ஒரு தொடரினை எழுதும்போது சிலசமயம் நம் பயணபாதையில் முந்தைய அனுபவத்தின் நிகழ்வுகளை புதிய அனுபவங்க​ளோடு​தொடர்புபடுத்தி ஒப்பிட்டு எழுத​வேண்டிய நிலையும் ஏற்படும், இந்தநான்காம் பாதையும் அப்படிதான். நான் பள்ளிபருவத்தினை தாண்டும் முன்பு, எனக்கு பள்ளி நண்பர்களை விட நான் வசிக்கும் இட நண்பர்கள் நிறையஉண்டு, அந்தவகையில் என் நண்பன் சீனிவாசமூர்த்தி, மற்றும் சிலர், நாங்கள் எல்​லோரும் பள்ளி விடுமுறைகாலங்களில் மிகவும் மகிழ்ச்சியாக சுற்றிதிரிந்த காலங்கள் உண்டு, அப்படிபட்ட காலங்களில், என்னுடைய நண்பனின் அக்கா பத்மா அதிகமாக வாரந்திர கதைநூல்கள் வாங்கி படிப்பார்கள், எங்களை ஒருநாள் கூப்பிட்டு பழைய புத்தககடையில்​சென்று கதைநூல்கள் வாங்கிவர பணித்தார், என் நண்பன் அதற்காக அக்காவிடம்​வைத்த ​கோரிக்கை நாங்கள் வாங்கிதந்தால் எங்களுக்கு சினிமாவுக்கு ​போக காசு தர​வேண்டும் என்பதே, அவரும் தருகிறேன் என்றார், நானும் என் நண்பனுடன் சேர்ந்து புத்தகம் வாங்க பழையநூல்கள் விற்கும் கடைக்கு​சென்றோம், அப்போது என் மனதில் தோன்றியது தான் சிறிய வாடகை நூலகம் அமைக்கும் எண்ணம், நண்பனிடம் என் கருத்தினை முன்​வைத்தேன், பணம் சம்பாதிக்க​வேண்டும என்ற எண்ணமெல்லாம் கிடையாது, நாம் செலவிடும் நேரத்தினை பயனுள்ளதாக​வேண்டும் என்ற ஆவல், அவனும் ஒப்புக்கொள்ள என் இல்லத்தில் எங்களுடைய கனவு நிறைவேறியது, எங்கள் பகுதியில் வசிக்கும் தாய்மார்களுக்கு வீடு​சென்று புத்தகங்களை​கொடுப்போம், இவ்வாறக எங்கள்​பொழுதும் இனிமயாகவும் , எங்கள்​செலவுக்கும் பணம் கிடைத்தது, எங்களுடைய மகிழ்ச்சியில் நடந்தது ஒரு வருத்தமான நிகழ்வு, அதுதான் என் நண்பனின் அம்மாவின் உடனடி மறைவு, ஒரு காலை​நேரத்தில் உடல் நலகுறைபாடு காரணமாக மருத்துவரிடம் ​சென்ற அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து​போனார், அந்த நிகழ்வு எங்களை மிகவும் பாதித்துவிட்டது, அந்நாள் முதல் நாங்கள் நடத்திவந்த நூலகமும் எங்கள்​சோகத்தோடு​சேர்ந்து முடங்கிவிட்டது, ஆனால் என்னை இந்த நிகழ்வு நூலகபாதையை ​நோக்கி திரும்பபார்க்க ​செய்தது, இவ்வாறக என்னுடைய இலக்கியவட்டம் ஆரம்பித்தது ஒரு ​​சோகநிகழ்வோடு, பயணங்களும் இனிய பாதைகளும் தொடரும்..........................

Saturday, December 6, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 3)


இந்த மூன்றாம்பயணஅனுபவத்திலிருந்து ஒரு இளைஞனனுக்கான பயண அனுபவத்தின் மூலம் தொடர்கிறேன், எனது இலக்கியவட்டம் எங்கள் ஊர் நூலகபாதையினை நோக்கி சென்றது, அந்த காலங்களில் நூலகத்தில் உறுப்பினராக​சேர்வது என்பது மிகவும் அரிதான விஷயம், நூலக விண்ணப்பபடிவத்தில் யாராவது அரசாங்க அதிகாரியிடம் சென்று அறிமுககடிதம் வாங்கிவரவேண்டும், அதற்காக நானும் என் அண்ணன் ( எனது பெரியஅம்மாவின் மகன் ) ரமேஷ் இருவரும் நூலகதில் உறுப்பினராக சேர்வதற்காக அறிமுககடிதம் வாங்குவதற்கு பல இடங்கள் சுற்றினோம், ஆனால் எங்களுக்கு உடல்வலிதான் அதிகமாயிற்றே தவிர கடிதம் கிடைத்தபாடில்லை, கiடைசியில் எங்களுக்கு எங்கள் ஊர் காவல்துறை தலைமை ஆய்வாளரின் ஒப்புதல் கடிதம் கிடைத்தது, அந்த கடிதம் கிடைத்தநாளிலில் நாங்கள் இருவரும் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததோம், ஒரு வேலைகிடைத்த மகிழ்ச்சி, அந்நாள் முழுவதும் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை, காரணம் நாங்கள் கடிதம் வாங்க​சென்ற நாளில் எனது அண்ணனுக்கு அவருடைய அப்பா ( எனது ​பெரியப்பா) ஒரு வேலை​செய்ய​சொல்லியிருந்தாராம், ஆனால் என்னிடம் இந்த தகவலை அண்ணன் ​தெரிவிக்கவில்லை, நாங்கள் ஒப்புதல் கடிதம் வாங்கி வீட்டுக்குள் நுழைந்தவுடன் எங்களிடம் ஒரு​கேள்வி, எங்கு ஊரை சுற்ற சென்றிருந்தீர்கள், நாங்கள் இருவரும் கடிதம் வாங்க சென்ற விவரம் தெரிவித்தோம், உடன் எங்கள் ஒப்புதல் கடிதத்தினை வாங்கி அவர் கிழித்து எரிந்துவிட்டார், காரணம் அவர் சொன்ன வேலையினை நாங்கள் முடிக்கவில்லை, அன்று முழுவதும் நாங்கள் அடைந்த வருத்தத்திற்கு
அளவேயில்லை, அதன்பின் நான் என் முயற்ச்சியை கைவிடவில்லை, என் நண்பன் மூலமாக மிக எளிதில் மற்றுமொறு அதிகாரியிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி உறுப்பினராகிவிட்டேன், இந்த அனுபவத்தின் மூலம் முயன்றால் எதுவேண்டுமானலும் சாதிக்கலாம் என்பதினை கற்றுக்கொண்டேன். அனுபவங்கள்​தொடரும்........