Tuesday, December 16, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 8 )


நாம் பயணிக்கும் பாதைகளில் பல சமயங்களில் சில நிகழ்வுகள் என்றும் நம் மனதை விட்டு அகலாதவைகாளக இருக்கும். சில சமயம் மனது கனக்கவும் செய்யும். நான் கூறும் இச்சம்பவம் என் கண்களை விட்டு இன்னும் அகலாமல் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கபடும் ஏற்காடு மலைவாசத்தலம் எங்கள் ஊர் அருகில் உள்ளது. எனது கல்லூரி நாட்களில் நான் நாட்டுநலபணி திட்டதிற்காக ​மேலே சொன்ன மலைபகுதிக்கு பத்துநாட்கள் சென்று இருந்தேன் . அங்கு மிகவும் புகழ் மிக்க ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தபட்ட ஒரு பள்ளிகூடம் தான் MONFORT CONVENT OF RESIDENTIAL SCHOOL இந்த பள்ளியில் அந்நாளிலேயே மாணவர்கள் ஆஸ்டலில் தங்கிதான் படிப்பார்கள், அதற்கு ஆகும் கட்டணமும் மிகவும் அதிகம், வசதிவாய்ப்பு உள்ளவர்கள்தான் இங்கு படிக்கமுடியும் நாங்கள் தங்கியிருந்த குடியிருப்பும் இப்பள்ளிக்கு அருகில்தான் இருந்தது, தினமும் நாங்கள் அந்த பள்ளியின் அருகில் நடைபயிற்சி ​மேற்கொள்ளுவோம். அவ்வாறன காலத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை என்று நினைக்கிறேன், பள்ளியின் வாரவிடுமுறை நாட்களில் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் ஆசையுடன்​குழந்தைகள் விரும்பிய உணவு மற்றும் உடைகளுடன் அவர்களை காண வந்திருந்தார்கள் அங்க நான் கண்ட காட்சி, சிறிது கூட அந்த குழந்தைகளுக்கு தங்கள் அம்மா அப்பாகளின் மீது பாசமில்லாமல் ஆங்கிலத்தில் hai என்று ​சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த​பொருட்களை வாங்கி​கொண்டு ஒரு ஜந்து நிமிடம் கூட நிற்காமல் சென்றுவிட்டார்கள், குழந்தைகளின்
பெற்றோர்களும் வருத்ததுடன் கண்கள் பனிக்க கனத்தஇதயத்துடன் ​வெளியில் காட்டி​கொள்ளாமல்​சென்றனர். இதுதான் இந்த பள்ளியின் உண்மை நிறம், அதுவும் பாசத்திற்கு ​இலக்கணமான நம் தமிழ்நாட்டில், மாணவர்களும் தமிழர்கள்தான். இந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது அதன் விளைவுதான் என் குழந்தையை இம்மாதிரியான பள்ளிகூடங்களில் நான் ஆரம்பத்திலேயே சேர்க்கவில்லை. இன்று உள்ள நிலைமையோ ​வேறு காண்வெண்டில் படிக்காமலேயே வளரும் குழந்தைகள் அப்படிதான் உள்ளார்கள், வாழ்க பணநாயகம்.

1 comment:

ராஜா சந்திரசேகர் said...

இது ஒரு ரணமான அனுபவம்.புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.