நாம் பயணித்த பாதைகளில் சில முக்கியஇடங்கள் நம் வாழ்க்கை பரிணாமத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய பங்களிப்பினை தரும்.
அந்த பங்களிப்புகள் நமக்கு பல்வேறுவகையில் பயனுள்ளதாகவும் இருக்கும், அவ்வகையில் நான் தவழ்ந்து, விளாயாடி, நடந்து, கண்ணயர்ந்து வந்த எங்கள் நகரத்தின்மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில்வண்டி நிலையத்தின் அனுபவங்கள்தான் இவை, இதோ நான் குழந்தை கண்கொண்டு
பார்த்தபோது, அன்றாடம் எனது தந்தை பள்ளி முடிந்துவந்தவுடன், ரயில்நிலையத்தில் ஒரு மேம்பாலம் உண்டு அங்கு என்னைகூடடிசென்று இயந்திரபாம்பின் வருகையை காண காத்திருப்பார். என்னைபோலவே என் இல்லத்தின் அருகில் அந்நாளில் என்வயது தோழியான ரமாவும் அவளின் அப்பாமடியில் உட்கர்ந்திருப்பார், இயந்திரபாம்பும் வந்து நிற்க்கும் அந்நேரத்தில் அந்த நிலையத்தில் பல்வேறு மரங்கள் உண்டு, மரத்தில் உள்ள பல்வேறு வகையான பறவைகளும் சத்தமிட்டுகொண்டு தன் குஞ்களோடு கொஞ்சிமகிழும், நான் அதே புகைவணடி நிலையத்தில் என் சகநண்பர்களோடு சேர்ந்து மரங்களை சுற்றியும், ஓய்வுக்காக நின்றுகொண்டிருக்கும்
புகைவண்டியில் ஒளிந்துகொண்டும், நிலக்கரிகளை அள்ளி ஒருவர்மீது ஒருவர் போட்டுகொண்டும் விளாயாடி இருக்கிறோம். எனது கல்லூரி நாட்களில் ரயிலடியில் அமைதியாக நாங்கள் பாடங்களும் படித்தும் இருக்கிறோம், அந்நாட்களில் நாங்கள் உடற்பயிற்சிக்காக நான் பள்ளிக்கு சென்றுவிட்டு சற்று காலற ஓய்வெடுக்கும் சமயத்தில்
மாலை 6 மணிக்கு தினமும் விருத்தாசலம்செல்லும் புகைவண்டி வரும் அதன் ஒட்டுனர் எங்களது நீண்டகாலநண்பர், அவர் எங்களை புகை வண்டியின் அருகில் அழைத்துசென்று அதன் நீராவி வரும்பகுதியில்
கால்களை காண்பித்து எங்களுக்கு அந்நாளிலேயே நீராவிமஜாஜ் செய்துள்ளார், காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்தரயிலடி இருந்த்து,
பலர் தாங்கள் காதலிக்கு அளிக்கும் கடிதங்களை பகிரங்கமாகமேம்பாலசுவரில் எழுதி வைப்பார்கள், இவ்வாறாக இருந்த ரயிலடி சமீபத்தில நான்நேரில் பார்த்தபோது முழுஇயந்திரதனமாகமாறி தன்னோடு நிரந்தரமாக இருந்த உறவுகளான மரங்களையும், பறவைகளையும், பூச்செடிகளையும் இழந்து கண்கள்கைகள் அற்ற ஒரு முடவனாக இருக்கின்ற காட்சியினை கண்டு என்கண்களும் பனித்தது, கலங்கி ஒரு பயனும் இல்லை, இன்று அந்த இடத்தில் முளைத்துள்ளன கணிப்பொறி பதிவுநிலையம், இப்பொழுதும் தன்னை காலத்தோடு மாற்றிகொண்டு ஆங்கிலம்பேசும் கான்வெண்ட்குழந்தைகள் மற்றும் செல்போன்காதலர்களின் வருகைகாகவும் காத்துகொண்டிருக்கிறது அந்த RAILWAY STATION. ரயில்வண்டிநிலையமே, நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய். இனிய பயணங்களின் வருகைகாக காத்திருங்கள்......
புகைவண்டியில் ஒளிந்துகொண்டும், நிலக்கரிகளை அள்ளி ஒருவர்மீது ஒருவர் போட்டுகொண்டும் விளாயாடி இருக்கிறோம். எனது கல்லூரி நாட்களில் ரயிலடியில் அமைதியாக நாங்கள் பாடங்களும் படித்தும் இருக்கிறோம், அந்நாட்களில் நாங்கள் உடற்பயிற்சிக்காக நான் பள்ளிக்கு சென்றுவிட்டு சற்று காலற ஓய்வெடுக்கும் சமயத்தில்
மாலை 6 மணிக்கு தினமும் விருத்தாசலம்செல்லும் புகைவண்டி வரும் அதன் ஒட்டுனர் எங்களது நீண்டகாலநண்பர், அவர் எங்களை புகை வண்டியின் அருகில் அழைத்துசென்று அதன் நீராவி வரும்பகுதியில்
கால்களை காண்பித்து எங்களுக்கு அந்நாளிலேயே நீராவிமஜாஜ் செய்துள்ளார், காதலர்கள் சந்திக்கும் இடமாகவும் இந்தரயிலடி இருந்த்து,
பலர் தாங்கள் காதலிக்கு அளிக்கும் கடிதங்களை பகிரங்கமாகமேம்பாலசுவரில் எழுதி வைப்பார்கள், இவ்வாறாக இருந்த ரயிலடி சமீபத்தில நான்நேரில் பார்த்தபோது முழுஇயந்திரதனமாகமாறி தன்னோடு நிரந்தரமாக இருந்த உறவுகளான மரங்களையும், பறவைகளையும், பூச்செடிகளையும் இழந்து கண்கள்கைகள் அற்ற ஒரு முடவனாக இருக்கின்ற காட்சியினை கண்டு என்கண்களும் பனித்தது, கலங்கி ஒரு பயனும் இல்லை, இன்று அந்த இடத்தில் முளைத்துள்ளன கணிப்பொறி பதிவுநிலையம், இப்பொழுதும் தன்னை காலத்தோடு மாற்றிகொண்டு ஆங்கிலம்பேசும் கான்வெண்ட்குழந்தைகள் மற்றும் செல்போன்காதலர்களின் வருகைகாகவும் காத்துகொண்டிருக்கிறது அந்த RAILWAY STATION. ரயில்வண்டிநிலையமே, நான் இல்லையென்றாலும் நீ இருப்பாய். இனிய பயணங்களின் வருகைகாக காத்திருங்கள்......
1 comment:
நண்பரே,
எங்கள் ரயில் நிலையத்தின் ஞாபகம் வருகிறது, அந்நாட்கள் மீண்டும் வரா,தற்போது அப்புகையிரத நிலையம் முற்றாக அழிந்துவிட்டது.
காதலர்களும், புறாக்களும் இல்லாத புகையிரத நிலையங்களும் உண்டோ.
தொடருங்கள்
Post a Comment