நான் எப்போதும் கடந்தவந்த பாதைகளில்ஏற்பட்ட பலவித அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைத்து சிலாகித்துபோவேன், அந்த நிகழ்வுகளின் தன்மை எப்படி இருப்பினும் என் மனதில் உள்வாங்கி அதன் காரணங்களை எண்ணுவேன். அப்படியான ஒரு அனுபவம்தான் இது. அதாவது 1976 ஆண்டு என்று நினைக்கிறேன், எங்கள் ஊரில் மட்டுமல்ல தமிழ்நாடே ஒரு மிகபெரிய புயலுடன்கூடிய மழையினை சந்திக்கநேரிட்டது,
எனது பெற்றோரினை பற்றி கூறவேண்டும் இந்த இடத்தில், அதாவது இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள். எனது தந்தையார் எங்கள் மாவட்டத்தினை சார்ந்த ஒரு கிராமபுற பள்ளியில பணிபுரிந்தநேரம், நான் என் தாயாரின் பள்ளியில் படித்தவன். அச்சமயத்தில் மேலே குறிப்பிட்டதுபோல் நாங்கள் இயற்கையின் கோரதாண்டவத்தை சந்திக்க நேரிட்டது, எங்கள் பகுதியில் ஒரு சிறிய ஆறு ஒன்று உண்டு,
இந்த மழையின் காரணமாக நாங்கள் வசிக்கும் பகுதி முழுவதும் தண்ணீர் புகுந்துவிட்டது, என் அப்பா கிராமபுற பள்ளியிலேயே அந்நாளில் தங்கிவிட்டார், நானும் என் அம்மாவும்தான் எங்கள் வீட்டில் இருக்கநேரிட்டது, மாலை நேரம் ஆக ஆக என் வீட்டிலும் நாங்கள்மேட்டுபகுதியில் இருந்தாலும் தண்ணீர் புகுந்துவிட்டது, நாங்கள் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணி வெளியில் வந்தபோது எதிர்பாரவிதமாக தண்ணீரில் விழுந்துவிட்டேன் எங்கள் பகுதியைசேரந்த ஒரு
பெரியவர் என்னை நீரின் ஆழத்தில இருந்து மீட்டார் இல்லையெனில் இந்த அனுபவங்கள் எழுத நான் இருந்திருக்கமாட்டேன். அந்நாளில் எனக்கு கிடைத்த அனுபவம்தான் பிற்காலத்தில் என்னை பாரதியையும், தந்தை பெரியாரையும் திரும்பி பார்த்து அவர்கள் பாதையில் நான் இன்றும் நடந்து செயலாற்றிகொண்டிருக்கிறேன், நடந்தது இதுதான் அந்த புயல் நாளில் எங்கள் பகுதியில் ஒரு வீடு அவர்கள் பூ வியாபாரம்செய்பவர்கள் அவர்கள் இல்லம் சற்று உயரமாகவும் ஓரளவிற்கு இடவசதி கொண்டாதாகவும் இருக்கும், அந்த இல்லத்தில் எங்கள் பகுதியைசேர்ந்த அனைவருக்கும் அந்த இரவு நேரத்தில் உணவு சமைத்து சமபந்தி விருந்து படைத்தார்கள். அந்த இரவு அனுபவம் பிற்காலத்தில் என் வாழ்க்கையில் பாரதிஎழுதிய சாதிகள் இல்லையடி பாப்பா பாடலும், தந்தை பெரியார் காட்டிய சமத்துவபாதையும் நினைத்து இன்றும் பயணித்துகொண்டு இருக்கிறேன். நீ மட்டும்
நினைத்தால் போதுமா என்று என்னை பாரத்து சிரிக்கின்ற தந்தை மற்றும் தனையனிடமும உள்ள கைதடிகள். பாதைகளும் இனிய அனுபவங்களும் உதிக்கும்......
1 comment:
நண்பரே,
அனுபவங்களில் சூடு பிடிக்கிறதே, உற்சாகமாக தொடருங்கள்.
Post a Comment