Wednesday, February 4, 2009

மண்ணும் மனிதர்களும் ( பயணம் 9)


இதுவரை என்னுடைய பயணஅனுபவங்களில் பல்வேறு காலகட்ட ஞாபகங்களை அனுபவங்களின் கதை என்ற​பெயரில் எழுதிவந்தேன். இந்த ​பயணத்தில் இருந்து சற்று மாறுதலான தலைப்புகளுடன் என்னுடைய பகிர்தல்​தொடரும்​
இதோ நாம் செல்லவேண்டிய இடம்
வளமும் வனப்பும் கொண்ட ஒரு கிராமம் அது, குழந்தைகள் முதல் ​பெரியவர்கள்வரை கள்ளம் கபடமற்ற மனிதர்கள், பெயர் சிங்காரப்பேட்டை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தது. அப்பொழுது எனக்கு வயது மூன்று, என்னுடைய மாமா திரு க்ஷோத்திரி அந்த ஊர் பள்ளிகூட வாத்தியார், திருமணமாகதவர் (அந்நாளில்) என்னுடைய தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்தார், என் அம்மா அப்பா இருவரும் வாத்தியார் வேலை பார்த்துவந்ததால், மாமா வீட்டில் என்னை அந்நாளில் விட்டு​வைத்திருந்தார்கள். இப்பொழுது நிகழ்வுக்கு வருவோம். அந்த ஊரை சுற்றி மிகபெரிய வனப்பகுதி ( இந்நாளில் எல்லேராலும் அறியப்பட்ட சந்தனகாட்டு வீரப்பன் இருந்த இடம்) அப்பகுதியில் உள்ள பொருளாதாரரீதியாக பின்தங்கிய மக்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள் பின்பற்றிய வழிமுறைதான் மிகவும் ஆச்சரியத்திற்கும் பரிதாபத்திற்கும உரிய செய்தி. அதிகாலையில் ஆரம்பித்து இருள்சூழும்நேரம்வரை வனப்பகுதியில் உள்ள முட்புதர்கள், செடிகள் கொடிகள் ஆகியவற்றில் அலைந்துதிரிந்து அங்கு கிடைக்கும் மிளகு, கிராம்பு மற்றும் விலைமதிப்புமிக்க ( இவர்களுக்கு அதன் மதிப்பு​தெரியாது) பொருட்களை சேகரித்து அந்த சிற்றூர் மற்றும் பக்கத்து ஊர்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொடுப்பார்கள் அதற்கு அவர்களுக்கு கிடைக்கும் விலை என்ன தெரியுமா? ஒருபடி அரிசி, பழைய துணிமணிகள், அன்றாடம் மீதமுள்ள பழையது ( பழையசோறு) இவற்றை வாங்கும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, ஆனால் கொடுப்பவர்களுக்கோ அளவில்லா இன்பம், அலைசலின்றி விலை மதிப்புடைய பொருட்களை வாங்குகிறோம் என்று. இதுதான் அம்மக்களின் உண்மை வாழ்க்கை, காலப்போக்கில் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி நான் விவரிக்க்​வேண்டியதில்லை, நான் கண்ட நிகழ்வுகள் என் நினைவைவிட்டு அகலாதநிலையில், பின்னாளில் இச்சம்பவங்களை பற்றி என்னுடைய பாட்டியிடம் விவரமாக கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் இவை,
இன்றைய சூழ்நிலையில் அந்த பகுதியில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டுபார்க்கும்போது நியூட்டனின் விதியினை மறுக்கதான்​தோன்றுகிறது.

1 comment:

Unknown said...

சில வேளைகளில் நீயுட்டனின் விதி கூட மனிதர்களை சார்ந்து வேறுபடுமோ?