Saturday, December 6, 2008

அனுபவங்களின் கதை ( பயணம் 3)


இந்த மூன்றாம்பயணஅனுபவத்திலிருந்து ஒரு இளைஞனனுக்கான பயண அனுபவத்தின் மூலம் தொடர்கிறேன், எனது இலக்கியவட்டம் எங்கள் ஊர் நூலகபாதையினை நோக்கி சென்றது, அந்த காலங்களில் நூலகத்தில் உறுப்பினராக​சேர்வது என்பது மிகவும் அரிதான விஷயம், நூலக விண்ணப்பபடிவத்தில் யாராவது அரசாங்க அதிகாரியிடம் சென்று அறிமுககடிதம் வாங்கிவரவேண்டும், அதற்காக நானும் என் அண்ணன் ( எனது பெரியஅம்மாவின் மகன் ) ரமேஷ் இருவரும் நூலகதில் உறுப்பினராக சேர்வதற்காக அறிமுககடிதம் வாங்குவதற்கு பல இடங்கள் சுற்றினோம், ஆனால் எங்களுக்கு உடல்வலிதான் அதிகமாயிற்றே தவிர கடிதம் கிடைத்தபாடில்லை, கiடைசியில் எங்களுக்கு எங்கள் ஊர் காவல்துறை தலைமை ஆய்வாளரின் ஒப்புதல் கடிதம் கிடைத்தது, அந்த கடிதம் கிடைத்தநாளிலில் நாங்கள் இருவரும் அளவில்லா மகிழ்ச்சியடைந்ததோம், ஒரு வேலைகிடைத்த மகிழ்ச்சி, அந்நாள் முழுவதும் கூட மகிழ்ச்சி நீடிக்கவில்லை, காரணம் நாங்கள் கடிதம் வாங்க​சென்ற நாளில் எனது அண்ணனுக்கு அவருடைய அப்பா ( எனது ​பெரியப்பா) ஒரு வேலை​செய்ய​சொல்லியிருந்தாராம், ஆனால் என்னிடம் இந்த தகவலை அண்ணன் ​தெரிவிக்கவில்லை, நாங்கள் ஒப்புதல் கடிதம் வாங்கி வீட்டுக்குள் நுழைந்தவுடன் எங்களிடம் ஒரு​கேள்வி, எங்கு ஊரை சுற்ற சென்றிருந்தீர்கள், நாங்கள் இருவரும் கடிதம் வாங்க சென்ற விவரம் தெரிவித்தோம், உடன் எங்கள் ஒப்புதல் கடிதத்தினை வாங்கி அவர் கிழித்து எரிந்துவிட்டார், காரணம் அவர் சொன்ன வேலையினை நாங்கள் முடிக்கவில்லை, அன்று முழுவதும் நாங்கள் அடைந்த வருத்தத்திற்கு
அளவேயில்லை, அதன்பின் நான் என் முயற்ச்சியை கைவிடவில்லை, என் நண்பன் மூலமாக மிக எளிதில் மற்றுமொறு அதிகாரியிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி உறுப்பினராகிவிட்டேன், இந்த அனுபவத்தின் மூலம் முயன்றால் எதுவேண்டுமானலும் சாதிக்கலாம் என்பதினை கற்றுக்கொண்டேன். அனுபவங்கள்​தொடரும்........

Monday, November 24, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 2)


நான் எங்கள் ஊரில் மிகவும் பிரபலமாய் விளங்கும் பாரதிவித்யாலயா உயர்நிலைப்பள்ளி என்ற கல்விநிலையத்தில் படித்தேன். அந்த பள்ளி அனுபவத்தில் வாழ்க்கை ஆரம்பம் மற்றும் முடிவு ஆகியவற்றை கண்டிருக்கிறேன். எவ்வாறு என்ற கேள்விக்கு இதோ பதில், எங்கள் பள்ளியின் அருகில் ஒரு இடுகாடு ஒன்று உள்ளது, நான் தினமும் பள்ளிக்கு வீட்டைவிட்டு செல்லும்போது கடவுளை வணங்கிவிட்டு ​செல்லுமாறு என் அம்மா ​சொல்லுவார். சில நாட்கள் வணங்குவேன், சில நாட்கள் விளையாட்டாக சென்றுவிடுவேன், ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அநேகமாக வாரத்தில் 5 நாட்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றிஉயிரற்ற மனிதர்களை எங்கள் பள்ளியை தாண்டி அருகில் உள்ள இடுகாட்டிற்கு காலை மாலை இரண்டு​வேளைகளிலும் எடுத்து​கொண்டு​செல்வார்கள், சிலசமயம் நான் பள்ளிக்கு வரும்​போது உயிரற்ற மனிதர்களின் சடலங்கள் என்னை கடந்து செல்லும் , நான் கடவுளை வணங்குகிறேனோ இல்லையோ எங்களை கடந்து ​செல்லும் மனிதர்களின் ஆரம்பகால பயணத்தைவிட முடிவுறுகிற பயணத்தினை பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது. அதிலும் மிகவும் பணம் படைத்தவர்கள் அலங்கார பவனிவரை ஏழைகளின் மூங்கில் மட்டும் என்று பலவகைகளில் கண்டுள்ளேன், மனிதர்கள் இவற்றிலும் தங்களை​வேறுபடுத்தி காண்பிக்கிறார்கள், மிஞ்சுவது ஒன்றும் இல்லை. ​எனக்கு ஒரு முற்​போக்கான சிந்தனையும் உண்டு, ஊர்களில் மட்டுமல்ல நகரங்களிலும் நம் உறவினர்கள் மரணம் அடைந்துவிட்டாலோ அல்லது அந்த இல்லத்திற்கு சென்று பார்த்துவிட்டுவந்தாலோ உடனடியாக குளிக்க வேண்டும் என்று​பெரியவர்கள் சொல்வார்கள், அப்படி பார்த்தால் எங்கள் பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிலேயே குளித்துவிட்டுதான் வகுப்பறைக்கு செல்லவேண்டும், முடியுமா? இதுதான் அந்த சிந்தனை. எங்களை​பொருத்தவரையில் அந்தநாளிலேயே இறப்பிற்கு அஞ்சாத மனதினை எங்கள் பள்ளியின் அருகில் உள்ள இடுகாட்டின் ஊர்வலங்களின் பவனி அனுபவம் மூலம்​தெரிந்து​கொண்டேன். அதுமட்டுமல்ல மரிக்கின்ற மனிதர்களோடு அன்றலர்ந்த மலர்களும் தங்கள் பயணத்தினை முடிப்பதுதான் உண்மையான தியாகம். அனுபவங்கள் ​மலரும்.............
சங்கமித்ரா

Thursday, November 20, 2008

அனுபவங்களின் கதை (பயணம் 1)


என்னை இந்த அனுபவங்களின்கதை தொடரினை இணையதளம் மூலம் எழுதுவதற்கு மானசீக தூண்டுகோலாக இருக்கும் என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குழந்தைஉள்ளம்​கொண்டவருக்கு அனைத்து பயணங்களும் சமர்பணம்.
எனது முதல் பயணத்தினை எனது சொந்தநகரமான​சேலத்தில் இருந்து ​தொடங்குகிறேன். எனது பள்ளி பருவத்தில் எங்களது தெருவில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி தினம்தோறும் தலையில் தட்டு ஏந்தி பழங்களை விற்று வருவார்கள். எங்கள் இல்லத்தில் வைத்து முதல் வியாபாரம்​செய்துவிட்டுதான் தன்னுடைய அன்றைய விற்பனையை தொடங்குவார். அவ்வாறு விற்பனை நடக்கும் சமயங்களில் நான் என் அம்மாவிடம் அவர்​கேட்கும் விலையைவிட இரண்டு அல்லது மூன்று ரூபாய் அதிகம் கொடுத்து பழத்தினை வாங்குமாறு சொல்லுவேன். நான் அவ்வாறு சொல்வதன் காரணம் அவர் தினமும் கால்நடையாக தலையில் சுமந்து சென்று விற்பனையை செய்வதுதான் என்று எனக்குள் ஏற்பட்ட பாதிப்பு, நான் அவ்வாறு​செய்வது என் அம்மாவுக்கு ஏற்படுதும் நஷ்டம் என்றோ அல்லது அந்தபெண்மணிக்கு நான் செய்யும உதவி என்றோ என் உள்ளத்தில் தோன்றியதில்லை. மனதில் சரி என்று பட்டதினால், நான் அந்த பெண்மணி எங்கள் இல்லத்திற்கு விற்பனைகாக வரும்​போதெல்லாம் இவ்வாறு​செய்வேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த​பெண்மணி எனக்கு அளிக்குமாறு தன் கூடையில் இருந்து தனியாக ஒரு பழத்தினை அளித்துவிட்டு செல்வார் நான் இல்லத்தில் இல்லாவிடினும். அந்த பெண்மணி இன்று உலகத்தில் இருக்கிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால் அந்த நல்ல உள்ளத்தை என்னால் இன்னும் மறக்கமுடியாத அனுபவம், வாழ்கையில் உழைத்துதான் முன்னேற வேண்டும் என்ற ஒரு நல்ல அனுபவத்தை அவர் மூலம்தெரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். பயணங்கள் ​தொடரும்.............................



சங்கமித்ரா